சுறுசுறுப்பு இல்லாமல் சோர்ந்து போய் இருக்கும் கணவனை சுறுசுறுப்பு ஆக்குவது எப்படி?
ஆண்கள் வார விடுமுறையில் சோம்பல் ஆக இருப்பார்கள். வேலை முடிந்து வரும் போதும், மிகுந்த அலைச்சல், வேலை பளுவால், அசந்து போய் இருப்பார்கள். பணப்பிரச்சனை, கடன் பிரச்சனை, மேலதிகாரியிடம் வாங்கிய திட்டு, ரோட்டில் போகும் போது சாலையில் வாங்கிய திட்டு, என பல காரணங்களால் சோர்ந்து போய் இருப்பார்கள். கணவரை சுறுசுறுப்பு ஆக்குவது எப்படி என பார்ப்போம். மிக ஈஸியான வழி: கணவரை நிற்க வைத்து பின்பக்கமாக சென்று மனைவி தன் பத்து கை விரல்களின் நுணிகளால் கணவரின் தலை முதுகு, பிட்டம், இரண்டு கால்கள் என மேல் இருந்து கீழாக மூன்று முறை வருடிவிட வேண்டும். கணவர் உடம்பில் இரத்த ஓட்டம் அதிகமாகி சுறுசுறுப்பாகி உங்களை அழைத்து கொண்டு ஷாப்பிங் கிளம்பிவிடுவார். மனைவி கணவனின் தலையும் முகமும் வருடிவிட வேண்டும். இரத்தம் ஓட்டம் அதிகமாக சோம்பலை விட்டு கணவர் இயல்பான சுறுசுறுப்புக்கு வந்து விடுவார். இது மனைவிக்கும் பொருந்தும். சோம்பலாக உள்ள மகன்,மகளையும் இவ்வாறு சுறுசுறுப்பு ஆக்கலாம். #CKS