மனஅழுத்தம்
மனஅழுத்தம் என்பது நமக்கு பல்வேறு காரணங்களால் ஏற்படும். இதற்கு எளிய தீர்வு : 1. நன்றாக ஆழ்ந்து தூங்கி விட வேண்டும், தூக்கம் நமக்கு புத்துணர்ச்சி கொடுக்கும். 2. அமைதியாக உட்கார்ந்து தியானம் செய்யலாம். 3. அமைதியாக உட்கார்ந்து நம் கண்களை மூடி மூக்கின் இரண்டு துவாரங்களிலும் மூச்சு காற்று மாறி மாறி போய் வருவதை கவனிக்க வேண்டும், மனம் அமைதியாகும். 4. இதயத்தின் மேல் இடது உள்ளங்கையை வைத்து அதன் மேல் வலது உள்ளங்கையை வைத்து அமைதியாக உட்கார வேண்டும், கண்களை மூடி. மனஅழுத்தம் குறையும். #CKS