பொடுகு தொல்லையா?
பொடுகு தொல்லை பெரும்பாலும் அனைவருக்கும் வரும். இதற்க்கு முக்கிய காரணம் உடல் சூடு, வறண்ட சருமம் இருந்தாலும் வரும். முடிந்தளவு உடல் சூடு ஏறாமல் பார்த்து கொள்வது நல்லது. உடல் சூடு ஆகும்போது கழுத்து நரம்புகள் சுருண்டு, தலைமுடிக்கு போகும் இரத்த ஓட்டம் கம்மியாகி விடும். அது பொடுகு உருவாக வழிவகுக்கும். இதற்கு எளிய தீர்வு: 1. குப்பைமேனி(Indian acalypha) இலையை அரைத்து தலைக்கு போட்டு, காயவைத்து பின் குளிக்க வேண்டும்.பொடுகு போய்விடும். 2. கற்றாழை ஜெல்லை தலைக்கு தடவி, காயவைத்து பின் குளிக்க வேண்டும். 3. மருதாணி இலையை அரைத்து தலைக்கு தடவி காயவைத்து குளிக்க வேண்டும். 4. பொடுகு தாங்க முடியாத அளவுக்கு தொல்லை கொடுத்தால், மொட்டைபோடுவது(tonsure) நல்லது. பொடுகும் காணாமல் போகும், அப்படியே இருந்தாலும், மேலே சொன்ன குறிப்புகளில் ஒன்றை பின்பற்றினால் பொடுகு முற்றிலும் போய்விடும். #CKS