பாதம் மரத்து போவதால் அவதியா?
பாதம் மரத்து போகும் பிரச்சனை பெரும்பாலும் 55 வயதை தாண்டிய பிறகு சிலருக்கு வரும். இதற்கு எளிய தீர்வு : 1. சூடான தண்ணீரில் கொஞ்சம் கல் உப்பு கலந்து பாதத்தில் ஒத்தடம் கொடுக்கலாம். 2. ஒரு பக்கெட்டில் சூடான தண்ணீர் ஊற்றி அதில் கொஞ்சம் கல் உப்பு போட்டு கலந்து, கால்களை அந்த பக்கெட்டில் முக்கி வைக்கலாம் சிறிது நேரம். சூடு நாம் தாங்கும் அளவு இருக்க வேண்டும். 3. காலை 7am மணி முதல் 9am மணி வரையிலும், மாலை 4.30 pm முதல் 5.30 pm வரையிலும் சூரிய ஒளி பாதத்தில் படும்படி உட்கார வேண்டும். தினம் இப்படி செய்தால் பாதம் மரத்து போகும் பிரச்சனை சரியாகும். #CKS