மலச்சிக்கலா நோ ப்ராப்ளம்
மலச்சிக்கல் பெரும் சிக்கல் பலருக்கும், அன்றாட வாழ்க்கையில். இதற்கு பெரும்பாலும் காரணம் நேரம்(time) கடந்து(late) உண்பது, அளவுக்கு(limit) மிஞ்சி(over) உண்பது, ஜீரணம் ஆகாத உணவை உண்பது தனது உடலுக்கு ஒவ்வாத உணவை உண்பது, இவையும் காரணம். தேவைக்கு குறைவாக தண்ணீர் அருந்துவது, நேரம் தவறி உறங்குவது, மிகவும் நேரம் கழித்து எழுவது, இவையெல்லாம் மலச்சிக்கல் உண்டாக காரணம். தினமும் வயிற்று பாரத்தை இறக்கிவிட வேண்டும், இல்லாவிட்டால் தலைவலிக்கும் உடல் சூடாகும், மனம் நிலை கொள்ளாது, வயிறு உருமி கொண்டே இருக்கும் கவனம் சிதறும்.
பைக்கில் செல்லமுடியாது, வயிறு பெரிதாகும். சிலருக்கு வயிறுவலிக்கும், அடுத்தவர் மேல் எரிந்து விழவும் தோணும்.
எவ்வளவோ முயற்சி செய்து பார்ப்பதுண்டு, மருந்து சாப்பிட்டு, கைவைத்தியம், பாட்டிவைத்தியம் என பட்டியல் நீளும். மலச்சிக்கல் அதிகமாக நாளடைவில் மூலம்(piles), பவுத்திரம்(fistula) போன்ற நோய்கள் உருவாகும். சிலருக்கு தலைமுடி உதிரும், பிரஷர் உருவாகும்.
மலச்சிக்கல் நீடித்தால் இரத்தம் அசுத்தம் அடைந்து இரத்த ஓட்டம் கம்மியாகும்,, பல வியாதிகள் உருவாகும்.
எந்த மருந்தும் இல்லாமல் பத்தியம் இல்லாமல், செலவும் இல்லாமல், ஒரு எளிமையான வழி உண்டு.
அதுவே நவுக்காசனம்(naukasana).
இந்த நவுக்காசனத்தை(naukasana) காலை படுக்கையில் இருந்து எழும் போதே செய்தால், நேராக டாய்லெட் தேடி தான் ஓடவேண்டும், அவ்வளவு விரைவாக போகத்தோன்றும். இல்லை எழுந்து முகம் கழுவிய பின்னரும் செய்யலாம், முப்பது நொடிகள் வரை செய்யலாம், அடுத்த சில நிமிடங்களில் மலச்சிக்கல் பிரச்சனை அகலும் முகம் மலரும்.
#CKS
Comments
Post a Comment